சைதாப்பேட்டை அதிகாரிகள் டிரான்ஸ்பர்: விசாரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுகுறித்து தமிழக தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கி விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல்கமிஷனரான லிங்டோ இன்று கூறினார்.

சைதாப்பேட்டை தொகுதியில் வரும் மே 31ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்தத்தொகுதிக்குட்பட்ட சென்னை மாநராட்சி அதிகாரிகள் சிலரை சமீபத்தில் தமிழக அரசு இடமாற்றம் செய்தது.

பின் தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடமாற்ற உத்தரவு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றுதேர்தல் கமிஷனுக்குத் திமுக புகார்க் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் ஊட்டியில் இன்று நிருபர்களிடம் லிங்டோ கூறியதாவது:

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல்கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாரங்கி விசாரணை நடத்துவார்.

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள மூன்று தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவாகத்தயாராகிக் கொண்டிருக்கிறது.

வரும் 22ம் தேதிக்குள் அந்தப் பணி முடிவடைந்தவுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த மூன்று தொகுதிகளிலுமே மின் வாக்குப் பதிவு எந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களுமே நிதிப் பற்றாக்குறையால் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால், அடிக்கடி தேர்தல்நடத்துவதை தேர்தல் கமிஷன் விரும்பவில்லை. அதற்காக அதிகம் செலவிடுவதையும் கமிஷன் விரும்பவில்லைஎன்றார் லிங்டோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+