ரணிலும் இந்தியா வருகை: வாஜ்பாய், ஜெவுடன் பேச்சு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா இந்தியா வருவதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இந்தியாவருகிறார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா நினைவுரையாற்ற நாளை அவர் இந்தியா வருவதாகக்கூறினாலும் இலங்கைப் பிரச்சனை, புலிகள் விவகாரம் தொடர்பாக பேசவே அவர் வருவதாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப்பேசவுள்ளார்.
புலிகள் விஷயத்தில் தொடர்ந்து கடுமையாக நடந்து கொள்ளுமாறு அவர் இந்தியத் தலைவர்களிடம் கோருவார்என்று தெரிகிறது. புலிகள் விஷயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் நடவடிக்கைகளை சந்திரிகாமுழுமையாக ஆதரிக்கவில்லை. இதனால், ரணிலை தட்டி வைக்க அவர் இந்திய ஆதரவைக் கோருவார்.
இந் நிலையில் இனப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று கோரிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் டெல்லி வர முடிவு செய்துள்ளார்.
அவரும் பிரதமர் வாஜ்பாயுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூன் முதல்வாரத்தில் இந்தியா வரத்திட்டமிட்டுள்ள ரணில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
இதற்காக அவர் சென்னை வரவும் முடிவு செய்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றவுடன் ரணில் இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவதுமுறையாக அவர் வருகிறார்.












Click it and Unblock the Notifications