ஓடும் ரயில் என்ஜினில் தீ... தப்பினர் கோவை பயணிகள்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் திடீர் எனதீப்பிடித்துக் கொண்டதையடுத்து ரயில் உடனே நிறுத்தப்பட்டது.
கோயம்புத்தூரிலிருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல வெள்ளிக்கிழமை இரவு கிளம்பிச்சென்றது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் திடீர் எனரயில் என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் மற்ற பெட்டிகளிலிருந்து என்ஜின் தனியாக கழற்றிவிடப்பட்டது. என்ஜின் பற்றி எரிய ஆரம்பித்தது.
ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் அதற்குள் என்ஜின் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் வேறு என்ஜின் பொருத்தப்பட்டு ரயில் ஓடியது.தீ விபத்து காரணமாக சுமார் 5 மணி நேரம் தாமதத்துடன் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.