புலிகளுக்கு எதிரான தீர்மானம்: பாஜக நிராகரிப்பு
திருநெல்வேலி:
விடுதலைப்புலிகளுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிப்பதாக தமிழக பாஜக அறிவித்துவிட்டது.
""இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிடாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.இந்தியாவின் தலையீடு அங்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்"" என்று அகில இந்திய பாஜகதலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
திருநெல்வேலியில் நடக்கும் தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் கூறியதாவது:
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நார்வே தூதுக்குழுவினர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
இதன்மூலம் விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா தலையிடாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்குவந்துள்ளோம். இப்பிரச்சனையில் இந்தியா தலையிட்டால் பிரச்சனைகள்தான் மேலும் வலுக்கக் கூடும்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை ஏற்கனவே நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகுதான் இந்த முடிவுக்குநாங்கள் வந்துள்ளோம் என்றார் ஜனா.