அமெரிக்காவில் இந்திய ராணுவத் தளபதி
வாஷிங்டன்:
இந்தியா- அமெரிக்கா இடையே ராணுவரீதியிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இந்திய ராணுவத் தளபதிபத்மநாபன் வாஷிங்டன் சென்றுள்ளார்.
அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதி ஜெனரல் ரிச்சர்ட் மெயர்ஸ்சுடன் நேற்று அவர் ஆலோசனைநடத்தினார். பென்டகனில் நடந்த இந்தச் சந்திப்பின்போது இந்திய ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க அமெரிக்காஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரிச்சர்ட் மேயர்ஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பத்மநாபன் இங்கு வந்துள்ளார். ஒரு வாரம் இங்கேதங்கப் போகும் அவர் அமெரிக்க ராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள், எல்லைப் பகுதி கண்காணிப்புமையங்களைப் பார்வையிடுவார்.
இந்த இடங்களில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து அவர் முடிவு செய்வார்.
அமெரிக்காவில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரிகளில் ஏற்கனவே ஏராளமான இந்திய அதிகாரிகள் பயிற்சி பெற்றுவருகின்றனர். அந்த நாட்டுடன் ராணுவரீதியில் முழு ஒத்துழைப்பு வைத்துக் கொள்ள அமெரிக்கா ஆர்வமாகஉள்ளது.
அதே நேரத்தில் இரு ராணுவத்தினரும் சேர்ந்து போர் பயிற்சி ஏதிலும் ஈடுபடும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.