எல்.டி.டி.ஈ. மிக பயங்கர தீவிரவாத அமைப்பு: சந்திரிகா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார்.

டெல்லியில் நேற்றிரவு நடந்த மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியாவின் நினைவு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்திரிகா கூறியதாவது:

தீவிரவாதத்துக்கான காரணத்தை முதலில் கண்டறிந்து அதைக் களைய வேண்டும். அப்படிச் செய்யாமல்தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியாது. அதே நேரத்தை தீவிரவாதத்தை எந்த அரசும் சகித்துக் கொள்ளவும் கூடாது.

தீவிரவாதத்தை அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தும் தனி நபர்கள், இயக்கங்கள் மீது தாமதமின்றி நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

தெற்காசியா தான் உலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை சந்தித்து வருகிறது. மாலத்தீவுகள் தவிர வேறுஎல்லா தெற்காசிய நாடுகளிலும் ஆயுதம் தாங்கிய அமைப்பினர் வன் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அல்-காய்தாவின் தலைமையகவே தெற்காசியாவில் தான் இருக்கிறது.

அல்-கொய்தாவும் விடுதலைப் புலிகளும் தான் உலகிலேயே மிக பயங்கரமான, மிக மோசமான தீவிரவாதஅமைப்புகள் என்றார்.

இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஒமர் அப்துல்லா,மாதவ்ராவ் சிந்தியாவின் சகோதரியும் மத்திய சிறுதொழில்துறை அமைச்சருமான வசுந்தரா ராஜே, மாதவராவ்சிந்தியாவின் மனைவி மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+