தலித் பஞ்சாயத்துக்களுக்கு மீண்டும் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 4 தலித் பஞ்சாயத்துகளுக்கு இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றுமாநில தேர்தல் கமிஷனர் பழனிச்சாமி கூறினார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பழனிச்சாமி பேசுகையில்,

பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதால் அவை காலியாக உள்ளன. இதுதவிர கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகியபஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

இவை அனைத்திற்கும் சேர்த்து இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.

இந்த பஞ்சாயத்துக்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சிறப்பு அதிகாரிகள்நியமிக்கப்பட்டு பணிகள் மேற்பார்வையிடப்பட்டு வருகின்றன என்றார் பழனிச்சாமி.

தலித் பஞ்சாயத்துக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியவில்லை. பெரும்பான்மைஜாதிக்காரர்களின் மிரட்டலுக்குப் பயந்து தலித் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

இதனால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. சமீபத்தில் பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டிக்கு மட்டும் தேர்தல்நடந்தது. இதிலும் கூட கிராமத்தினர் சார்பில் பொதுவாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

அதிலும் கூட பாப்பாப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனிக்கொடி பதவியேற்ற சிலநாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்து விட்டார். கீரிப்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கருத்தகண்ணனோ பதவியேற்ற அடுத்த நிமிடமே தன் பதவியை ராஜினாமா செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+