குஜராத்: ராஜ்யசபாவிலும் ஓட்டெடுப்புக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்குவது தொடர்பாக விவாதம் நடத்த ராஜ்ய சபாவும் இன்றுஅனுமதியளித்து விட்டது.
ராஜ்ய சபாவின் 170வது பிரிவின் கீழ் குஜராத் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி கடந்த ஏழுநாட்களாக அவை நடவடிக்கைகளை எதிர்க் கட்சி எம்.பிக்கள் தடுத்து வந்தனர்.
லோக் சபாவில் 184வது பிரிவின் கீழ் இப்பிரச்சனை குறித்து வரும் 30ம் தேதி விவாதம் நடத்த சபாநாயகர் பி.எம்.சயீது அனுமதி அளித்ததையடுத்து, இன்று ராஜ்யசபாவிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் விவகாரம் தொடர்பாக ராஜ்ய சபாவில் வரும் மே 2ம் தேதி விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜ்ய சபா நடவடிக்கைகள் இன்று எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications