இளங்கோவனுக்கு ஒலிபெருக்கி மறுப்பு: சேலத்தில் காங்கிரசார் சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, அக்கட்சியின் தலைவர்இளங்கோவனுக்கு ஒலிபெருக்கியில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அக்கட்சியினர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

குஜராத் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றுகோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் இளங்கோவனும் கலந்து கொண்டார். ஆனால் கூட்டத்தினரிடையே பேசுவதற்காக அவர்முயற்சித்தபோது, அவர் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர்.

கூடியிருந்த காங்கிரஸ் பிரமுகர்களும் தொண்டர்களும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் போலீசார் அசைந்தேகொடுக்கவில்லை. ஒலிபெருக்கியை உபயோகப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாருமே அதன்மூலம் பேச தாங்கள் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறிவிட்டனர்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸ்காரர்கள், இதைக் கடுமையாகக் கண்டித்து இளங்கோவன் தலைமையில் சேலம்மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாகச் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அனுமதியளித்தார். அதன் பிறகே காங்கிரஸ்தொண்டர்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+