ஸ்ரீரங்கம் கோவில் அன்னதானத்துக்கு சம்பளத்தை அளித்த ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் இலவச அன்னதானத் திட்டத்திற்கு தனது மார்ச் மாத சம்பளப் பணமானரூ.9,677 தொகையை முதல்வர் ஜெயலலிதா நிதியாக வழங்கினார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள திருக்கோவில்களில் இலவச மதிய உணவுத் திட்டத்தை ஜெயலலிதா கடந்த மாதம்தொடங்கினார்.
இந்தத் திட்டத்திற்கு தனது மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் அன்பளிப்பைப் பெறும் முதல் கோவில் என்ற பெருமை திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்கோவிலுக்குக் கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலுக்கு தனது மார்ச் மாத சம்பளத்தை அன்பளிப்பாகவழங்கினார் ஜெயலலிதா.
மார்ச் மாதத்திற்குய சம்பளத் தொகையான ரூ.9,677க்கான காசோலையை அந்தக் கோவிலின் இணை கமிஷனரானராஜநாயகத்திடம் ஜெயலலிதா நேற்று கோட்டையில் வழங்கினார்.












Click it and Unblock the Notifications