For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைதை அதிகாரிகள் டிரான்ஸ்பர்: தமிழக தேர்தல் கமிஷன் விசாரணை முடிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுஅங்குள்ள சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தமிழக தேர்தல் கமிஷனர்மிருத்யுஞ்சய் சாரங்கி நடத்தி முடித்து விட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சைதாப்பேட்டையில் 11 அதிகாரிகளும், வாணியம்பாடியில் நான்குஅதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷனிடம் திமுக புகார் செய்தது.

வேண்டுமென்றே தமிழக அரசு முன் தேதியிட்டு இந்த இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் திமுகஎம்.பியான குப்புசாமி தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து சாரங்கி விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் கமிஷனரான ஜே.எம். லிங்டோசமீபத்தில் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி இந்த இடமாற்றங்கள் குறித்து சாரங்கி விசாரணை நடத்தினார். மேலும் சென்னை மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) கார்த்திக் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் ஆகியோரும் இது தொடர்பானஅறிக்கைகள் மற்றும் ஆவணங்களை தமிழக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பானமுழு விசாரணை அறிக்கையை சாரங்கி இன்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X