அச்சிறுப்பாக்கம் இடைத் தேர்தல்: டிக்கெட் கேட்டு ஒரே நாளில் 100 அதிமுகவினர் மனு
சென்னை:
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று மட்டும் 100 அதிமுகவினர் மனுகொடுத்தனர்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் மே 31ஆம் தேதி இடைத்தேர்தல்நடைபெற இருப்பதையொட்டி, வேட்பு மனு தாக்கல் மே 6ஆம் தேதி தொடங்குகிறது.
எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்புடன் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000கட்டணமாக கட்டி விண்ணப்ப மனுக்களை பெற வேண்டும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்தார்.
இதையடுத்து, நேற்று அச்சிறுப்பாக்கம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள்அமைச்சர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்பட 100 பேர், கட்சி அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களைப் பெற்றனர்.
பின்னர், மனுக்களைப் பூர்த்தி செய்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரான ஓ.எஸ். மணியிடம் கொடுத்தனர்.
அதிமுக சார்பில் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விரும்புவோர், இன்றும் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை தங்கள் மனுக்களைக் கொடுக்கலாம் என்று அதிமுக தலைமை கூறியுள்ளது.