ஜெயலலிதாவுக்கு பா.ஜ.கவின் நன்றிக் கடன்
கோவை:
மத்தியில் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில், சபாநாயகர் காளிமுத்துவுக்கு எதிராக திமுக கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
நரேந்திர மோடியை மாற்றும் விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது. இதில் முதலில்மோடிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ஜெயலலிதா இப்போது அவருக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லைஎன்றும் நடுநிலை வகிக்கப் போவதாகவும் கூறிவிட்டார்.
இந் நிலையில் சபாநாயகர் காளிமுத்து மீது திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மான் கொண்டு வர உள்ளது. தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக கொண்டு வரும் இத் தீர்மானத்தை பா.ஜ.க. ஆதரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதை ஆதரிக்க மாட்டோம் என மாநில பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி கூறிவிட்டார். திமுககொண்டுவந்துள்ள தீர்மானம் காரணமில்லாதது, தேவையில்லாதது. இதை ஆதரிக்க முடியாது என்றார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
காளிமுத்து நியாயமாக நடந்து வருகிறார். அவர் மீது ஏன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்என்று தெரியவில்லை.
இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு பினாமியா என்பதுகுறித்து ஆராய்ந்தது உண்மையைக் கண்டுபிடிக்கும்படி மத்திய அரசையும் பா.ஜ.க. தலைமையையும் கேட்டுக்கொள்வோம் என்றார்.
அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கச் சொல்வீர்களா என்று கேட்டபோது, யூகத்துக்கு பதில்சொல்ல முடியாது என்றார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக முன்னணியே கிடையாது. அது மத்தியில் மட்டும் தான் இருக்கிறது என்றும்கூறினார்.