For Quick Alerts
For Daily Alerts
Just In
விளம்பர போர்டு வைக்க வேண்டுமா? - மாநகராட்சியை நாடுங்கள் !!
சென்னை:
விளம்பரப் பலகை வைக்க மாநகராட்சியிடம் கட்டாயம் அனுமதி வாங்க வேண்டும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி அலுவலகங்களில் விளம்பரப் பலகை வைக்க அனுமதி கோரி மனுக்கள் வந்து குவியத்தொடங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சியில் மட்டும் இதுவரை 3,600 மனுக்கள் வந்து குவிந்துள்ளதாக அமைச்சர் துரைராஜ் இன்றுசட்டசபையில் தெரிவித்தார்.
இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய அனுமதி விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநகராட்சி அனுமதியின்றி அமைந்திருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கையும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வரைக்கும் 307 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன என்றும்துரைராஜ் கூறினார்.
Comments
Story first published: Friday, April 26, 2002, 5:30 [IST]