For Quick Alerts
For Daily Alerts
Just In
காளிமுத்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக முடிவு
சென்னை:
சட்டசபையில் சபாநாயகர் காளிமுத்து மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று திமுகஎம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கூறினார்.
நேற்று சட்டசபையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பினாமி தொழிலதிபர் சீனிவாசன் என்று முதல்வர்ஜெயலலிதா கூறியதையடுத்து பெரும் அமளி ஏற்பட்டது.
அவையில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்று கூறி திமுக எம்.எல்.ஏக்கள் பலர் சட்ட சபையில் இருந்துவெளிநடப்பு செய்தனர்.
பினாமி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று சட்டசபைக்குள்ளேயே நின்று கொண்டு கோஷம்போட்ட மீதமிருந்த திமுக எம்.எல்.ஏக்களும் சபைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இவ்விவகாரம் குறித்து திமுக தலைமையிடம் கலந்து பேசி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக பரிதி கூறினார்.
Comments
Story first published: Friday, April 26, 2002, 5:30 [IST]