For Daily Alerts
Just In
வாணியம்பாடி எங்களுக்கே: தேசிய லீக்
சென்னை:
வாணியம்பாடி தொகுதியில் நாங்கள்தான் போட்டியிடுவோம். எங்களுக்கு ஆதரவு தருமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கேட்கப் போகிறோம் என்று இந்திய தேசிய லீக் தலைவர் காதர் மொய்தீன்கூறியுள்ளார்.
வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் பேசுகையில்,
வாணியம்பாடி இடைத் தேர்தலில் எங்களது கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அவருக்கு அதிமுகஆதரவு தரும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த தேர்தலில் எங்களது கட்சிதான் இங்கு போட்டியிட்டது. எனவே இப்போதும் நாங்களே இத்தொகுதியில்போட்டியிடுவோம்.
அதிமுகவுடன் கூட்டணி தொடரும். ஆனால் வாணியம்பாடியில் எங்களுக்குத்தான் அதிமுக ஆதரவு தர வேண்டும்.மற்ற இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிப்போம் என்றார் காதர் மொய்தீன்.
Story first published: Friday, April 26, 2002, 5:30 [IST]