லாரி-கார் மோதல்: 3 பொறியியல் மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே கார் மீது சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் காரில் பயணம் செய்த 3பொறியியல் கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் நாமக்கல் அருகே உள்ள ஷீலா பொறியியல் கல்லூரி மாணவர்கள். நாமக்கல்லில் போய் சாப்பிட்டுவிட்டுகல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி எமனாக வந்தது.
படு வேகத்தில் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதினார்.
இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் இருந்த மூன்று மாணவர்கள் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
இன்னொரு மாணவர் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications