வீரப்பனை பிடிக்க தவறிய ஜெ. பதவி விலகுவாரா? காங்.
சென்னை:
ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்ட அதிமுக அரசால் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை. இதனால், முதல்வர்ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கோரியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சியில் இருந்தபோது வீரப்பனைப் பிடிக்க முடியாத கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்அதே காரணத்திற்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார் ஜெயலலிதா.
இப்போது அதே காரணம் ஜெயலலிதாவுக்கும் பொறுந்தும். ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. ஒரு வருடம் ஆகிவிட்டது.வீரப்பனை இவர் பிடித்துவிட்டாரா? ஜெயலலிதாவின் பேச்சுப்படியே பார்த்தால் இவர் இப்போது ராஜினாமாசெய்ய வேண்டும்.
வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், ப.சிதம்பரத்தின் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம்.
மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசப் போவதில்லை என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்குத் தயாரில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications