பா.ம.கவினர் மீதான தாக்குதல்: போலீஸ் தான் காரணம் என்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எதிர்க் கட்சியினரின் நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க போலீசார் தவறியதால் தான் பாட்டாளி மக்கள்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஆட்சியில் எதிர்க் கட்சியினரின் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்றாலே அதை போலீசார் கண்டுகொள்வதே இல்லை. இந்த நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு தரப்படுவதும் இல்லை.
இதன் காரணமாகத் தான் நேற்றிரவு பா.ம.கவினர் சென்ற வேன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால்உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு போலீசாரின் அலட்சியப் போக்கு தான் காரணம்.
போலீசாரின் இந்த ஒருதலைப்பட்சமான செயலையும், பா.ம.கவினர் மீது நடந்த தாக்குதல்களையும் நான்வன்மையாக கண்டிக்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications