எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை பிபிரசுரிக்கத் தடை
சென்னை:
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க இதயக்கனி என்ற வாரப் பத்திகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா விஜயக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,இதயக்கனி என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக எஸ்.விஜயன் இருக்கிறார்.
இவர் தனது பத்திக்கை விற்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறான, நான் ஏன் பிறந்தேன் என்றதொடரை தனது பத்திரிக்கையில் பிரசுக்க முடிவு செய்துள்ளார்.
பத்திரிக்கை விற்பனைக்காக எம்.ஜி.ஆர். குறித்து பொய்யான தகவல்களை எழுதி வருபவர் விஜயன். எம்.ஜி.ஆர் தோட்டத்தைபாதுகாக்கும் அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ள விஜயன் இதுபோன்று எழுதி வருவது எம்.ஜி.ஆரின் புகழைக் குறைக்கும்வகையில் உள்ளது.
இந் நிலையில் நான் ஏன் பிறந்தேன் தொடர் இதயக்கனி பத்திரிக்கையில் பிரசுக்கப்பட்டால் அது எம்.ஜி.ஆருக்கு மேலும் இழுக்குசேர்ப்பதாக அமையும். எனவே அதை பிரசுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோயிருந்தார்.
மனுவை விசாத்த நீதிபதி சிவசுப்ரமணியம், ஆனந்த விகடன் நூலில் தொடராக வந்த நான் ஏன் பிறந்தேன் என்ற தொடரைமீண்டும் இதயக்கனி நூலில் பிரசுக்க தடை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications