பா.ம.க. தொண்டர்கள் மீது பயங்கர தாக்குதல்: ஒருவர் வெட்டிக் கொலை- ஜாதி மோதல் வெடிக்கும் அபாயம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இளைஞக் விழா நடக்கும்.நேற்றிரவு இரவு இதே போல சித்திர பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் வேன்கள், லாரிகள் மூலம் மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
இதில் 8 வேன்கள் சேர்ந்தார்போல மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தன. அந்த வேன்கள் கிழக்கு கடற்கரை சாலையில்மரக்காணம் அருகே உள்ள தலித் மக்கள் நிறைந்த ஜம்புதேவி காலனி அருகே வந்தன.
அப்போது வேனில் வந்தவர்கள் ஜம்புதேவி காலனியைச் சேர்ந்த பெணகளை கேலி செய்துள்ளனர். அந்தப் பகுதியைச்சேர்ந்தவர்கள் மீது பாட்டில்களை வீசியுள்ளனர். இதையடுத்து வேன்களை அப் பகுதி மக்கள் வழிமறித்தனர்.
அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இது பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து வேன்களில் வந்தபா.ம.கவினர் மீது மரக்காணத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கணக்கான உள்ளூர் கும்பல் சேர்ந்துவேன்களில் வந்தவர்களைத் தாக்கினர்.
கத்திகள், அரிவாள்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடந்தது. 8 வேன்களுக்கும் தீ வைத்தனர். மோதலில் வேனில்வந்த 15 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் திருவிடைமருதூரைச்சேர்ந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அந்தக் கும்பல் இத்தோடு ஓயவிலலை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்து கொண்டிருந்த பல்வேறு வாகனங்கள் மீதும்தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பாவி பஸ், கார் பயணிகளும் பாதிக்கப்பட்டனர். லாரிகள் மீதும் கல்வீச்சு நடந்தது.
இந்த சம்பவங்களினால் அந்தப் பகுதியில் கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் உயர் அதிகாகள்,மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் விரைந்து வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
மரக்காணத்தில் அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த மண்டல டி.ஐ.ஜி தலைமையிலான உயர் அதிகாரிகள்அங்கேயே முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர். பெரும் அளவிலான ஆயுதம் தாங்கியபோலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. பிற்பகலில் தான் வாகனப் போக்குவரத்துஅனுமதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜம்புதேவி காலனியைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குததின் எதிரொலியாக பாண்டிச்சேயில் உள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் வன்னியர்களுக்கும் தலித்சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு இடையே கலவரம் ஏற்படக் கூடும் என்றுகருதப்படுவதால் வட மாவட்டங்களில் முக்கியஇடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.