சைதை: வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது
சென்னை:
இடைத் தேர்தல் நடக்கவுள்ள சைதாபேட்டையில் வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய தேர்தல் அடையாளஅட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது.
இந்தத் தொகுதியிலும் வாணியம்பாடி, அச்சிறுபாக்கம் தொகுதிகளிலும் வரும் மே 31ம் தேதி தேர்தல்நடக்கவுள்ளது.
சைதாப்பேட்டையில் மொத்தம் 2,49,000 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 97,000 பேருக்கு அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டாக வேண்டும்.
இந்த அட்டைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம், கல்விச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒரு சான்றைக் காட்டி அடையாள அட்டையைப் பெற்றுச்செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றுகளைக் காட்டுபவர்களுக்கு உடனடியாக இன்ஸ்டன்ட் போட்டோ எடுக்கப்படுகிறது. உடனே அதைஅட்டையில் ஒட்டி தந்துவிடுகின்றனர்.
அரை மணி நேரத்தில் அடையாள அட்டை கிடைத்து விடுகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் 14ம் தேதி வரைநடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications