வழக்கம்போல் நேற்றும் சென்னையில் 1 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நேற்றும் ஒரு கடை உடைக்கப்பட்டு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களாக சென்னையில் மாற்றி மாற்றி கொலைகளும் கொள்ளைகளும் நடந்து வருகின்றன.
தினமும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்துவிடுகிறது. வழக்கம்போல் நேற்றும் ஆவடியில் ஒரு மார்வாடியின் அடகுகடை உடைக்கப்பட்டது.
காந்தி நகரில் உள்ள சுபாஷ்சந்த் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கடையில் பூட்டை திருடர்கள் உடைக்கவில்லை.பதிலாக சுவர்களையே உடைத்துவிட்டு உள்ளே புகுந்து தங்க, வெள்ளி நகைகளையும் பணத்தையும் அள்ளிச்சென்றுள்ளனர்.
சுவர்களில் 2 பேர் நுழையும் அளவுக்கு பெரிய பெரிய 3 ஓட்டைகள் போடப்பட்டுள்ளன. இதை உடைக்கவே பலமணி நேரம் ஆகியிருக்கும்.
மிக நிதானமாக சுவர்களை உடைத்து கொள்ளையடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications