செல்வன் வாஜ்பாய்
சென்னை:
கல்யாணமாகாத ஆண்களையும், பெண்களையும் குறிக்கும் செல்வன் மற்றும் செல்வி ஆகிய வார்த்தைகளுக்கு விடை கொடுத்துவிட்டு இருவருக்கும் பொதுவான திருமிகு என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி யோசனை தெவித்தார்.
பாலபாரதி பேசுகையில், ஆங்கிலத்தில் தான் கல்யாணமாகாத பெண்களை மிஸ் என்று கூப்பிடுகிறார்கள். தமிழில் அதையேகாப்பியடித்து கல்யாணமாகாத பெண்களை செல்வி என்று அழைக்கிறார்கள்.
அந்தப் பெண்ணுக்கு 60 வயது ஆனாலும் செல்வி என்கிறார்கள். இது பெண்ணடிமைத்தனமான வார்த்தை. ஆனால்கல்யாணமாகாத ஆண்களை 60 வயதில் யாரும் செல்வன் என்று அழைப்பது இல்லை.
தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவியை எல்லோரும் செல்வி பாத்திமா பீவி என்றே அழைத்தார்கள்.
ஆனால் கல்யாணமாகாத பிரதமர் வாஜ்பாயை யாரும் செல்வன் என்று அழைப்பதில்லை, மாறாக திரு என்றே அழைக்கிறார்கள்.ஏன் இந்தப் பாகுபாடு. கல்யாணமாகாத பெண்களையும், ஆண்களையும் பொதுவாக திருமிகு என்று அழைக்கலாம் என்றார்அவர்.
இந்த சுவாரசியமான விவாதம் நடந்தபோது முதல்வர் "செல்வி ஜெயலலிதா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications