For Daily Alerts
Just In
தஞ்சை அருகே ஒரு பிரவசத்தில் 4 குழந்தைகள் பெற்ற பெண்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம் என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவசத்தில் 4குழந்தைகள் பிறந்தன.
கூலித் தொழிலாளியின் மனைவியான ரஞ்சிதம், கர்ப்பிணியாக இருந்தார். அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதும்ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காரிலேயே அவருக்கு ஒரு பையனும், ஒருபெண்ணும் பிறந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் இந்த இருகுழந்தைகளும் இறந்தே பிறந்தன.
ஆனால் காரில் பிறந்த இரு குழந்தைளும் ஆரோக்கியமாக உள்ளன.
Comments
Story first published: Sunday, April 28, 2002, 5:30 [IST]