காங்கிரசுடன் இணைப்பா? - "மூச்" என்கிறார் ப.சி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காங்கிரசுடன் தன்னுடைய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை இணையவே இணையாது என்று அதன் தலைவர் ப.சிதம்பரம் இன்று கூறினார்.
இதுகுறித்து திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்யவேண்டும். இதற்குக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் கோர வேண்டும்.
காங்கிரசுடன் நாங்கள் எப்போதும் இணைய மாட்டோம். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மூன்றாவதுஅணிக்கு ஆதரவு தருவோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் பெற வேண்டும். இதையடுத்துலோக்சபாவுக்கும் வெகு விரைவில் தேர்தல் வரும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications