கல்லூரி ஆசிரியையை ஏமாற்றிக் கற்பழித்த பள்ளி ஆசிரியர் கைது
சிவகங்கை:
பெண் விரிவுரையாளரை கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி கற்பழித்து விட்டு, பின் கல்யாணம் செய்துகொள்ள மறுத்த பள்ளி ஆசிரியரைப் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில் உள்ள மீனாட்சி நகர்-சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ஜோஸப் அமல்ராஜ் என்பவருடைய மகள் ஜான்சி(25). இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஜான்சி வசிக்கும் அதே தெருவில் வசிப்பவர் மில்ட்டன் (25). இவர் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார்உயர்நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஜான்சியும் மில்ட்டனும் கடந்த ஒரு வருட காலமாகக் காதலித்து வந்தனர். இதற்கிடையே ஆறு மாதங்களுக்குமுன்பு, ஜான்சியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை மிலிட்டன் கற்பழித்து விட்டார்.
ஆனால் அதன் பின்னர் ஜான்சியை மிலிட்டன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
இதையடுத்து ஜான்சி இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் மிலிட்டனை கைது செய்து, விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications