மரக்காணம் சம்பவம்: சட்டசபையிலிருந்து பாமக வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மரக்காணத்தில் பாமக தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் காளிமுத்து பேசஅனுமதிக்காகததையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்புசெய்தனர்.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 26ம் தேதி இரவு வன்னியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தவிழாவுக்காக மாமல்லபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த பாமக தொண்டர்கள், வழியில் மரக்காணம் என்ற ஊரில்தலித் மக்களால் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கரத் தகராறில் புளியம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு அதிமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டியதுபாமக.

இந்நிலையில் மரக்காணம் சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபை பாமக தலைவரான மணி பேச முயற்சித்தார்.இந்தச் சம்பவத்தில் 200க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு உரிய நிவாரணம்வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் அவர் மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கு காளிமுத்து மறுத்ததையடுத்து, பாமக எம்.எல்.ஏக்கள்அனைவரும் மணி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மரக்காணம் சம்பவம் தொடர்பாக 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 33 பேர் தலித்துகள் என்றும் எஞ்சிய ஆறு பேர் வன்னியர்கள் என்றும்தெரிவித்தார். இது தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சட்டம்-ஒழுங்குப் பிரிவு ஐ.ஜி. தலைமையில் அங்கு நூற்றுக்கணக்கானபோலீசார் முகாமிட்டதையடுத்து, அங்கு பெரும் கலவரம் பரவாமல் பாதுகாக்கப்பட்டது என்றும் ஜெயலலிதாகூறினார்.

முன்னதாக இந்தப் பிரச்சனை குறித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகன், போலீசார் முன் கூட்டியேதக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மோதல் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+