சென்னை ரயிலில் நகைகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்:

திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் மர்ம ஆசாமி நகைகளைக்கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

திருத்தணி அருகே உள்ள உள்மேளன்சேரியைச் சேர்ந்த மணிரத்னம் என்பவரது மகள் செஞ்சுலெட்சுமி. இவர்திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

தினமும் திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயிலில்தான் இவர் வேலைக்குச் சென்று வருவார்.

நேற்று விடுமுறையாதலால் கூட்டம் குறைவாக இருந்தது. எப்போதும் போல் பெண்கள் பெட்டியில் அவர்ஏறியபோது, அதே பெட்டியில் ஒரு ஆண் உட்கார்ந்து இருந்ததை செஞ்சுலட்சுமி பார்த்தார்.

இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இவரும் மற்றொரு ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அப்பெட்டியில்மேலும் சில பெண் பயணிகள் இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து அந்த மர்ம நபர் திடீரென்று எழுந்து பெண் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி,அவர்களிடமிருந்து நகைகளைப் பறித்துக் கொண்டான். பின்னர் சிக்னலுக்காக ரெயில் மெதுவாகச் சென்றபோது,அவன் ரயிலில் இருந்து இறங்கித் தப்பி ஓடி விட்டான்.

இது குறித்து செஞ்சுலட்சுமி அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து தீவிரவிசாரணை நடத்தி தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+