For Daily Alerts
Just In
அரசு மரியாதையுடன் நெல்லை ராணுவ வீரர் உடல் தகனம்
திருநெல்வேலி:
பாகிஸ்தான் எல்லையில் வீர மரணமடைந்த திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ராணுவ வீரர்பாலகிருஷ்ணனின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தகனம்செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.பின்னர் அங்கிருந்து பாபநாசம் கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு திருநெல்வேலி மாவட்ட கலெக்டர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள்ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அரசு மரியாதைகளுடன் பாலகிருஷ்ணனின் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
Comments
Story first published: Friday, May 3, 2002, 5:30 [IST]