உசிலம்பட்டி திருவிழாவில் பயங்கர கோஷ்டி மோதல்: 40 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் உள்படஏராளமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம். இங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுவருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. கிராமத்து மக்கள்அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரைத் தெளித்து சந்தோஷமாக நீராட்டு விழாவைக் கொண்டாடினர்.

அப்போது இரு பிரிவினருக்கிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் கலவரமாகமாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் பலருடைய மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது.

கலவரத்தை அடக்க முயன்ற போலீசார் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். காயமடைந்த போலீசார் உள்படஅனைவரும் ஏழுமலை மற்றும் உசிலம்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து கலவரக்காரர்களை சமாதானப்படுத்தினர். பின்னர்மோதலில் ஈடுபட்டவர்களை வீடு வீடாக சென்று போலீசார் கைது செய்தனர்.

இதுவரை இரு தரப்பினரையும் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடரும் என்று அச்சம்நிலவுவதால் அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+