சைதையில் மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றுஅக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கரய்யா கூறினார்.
தஞ்சாவூல் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சைதாப்பேட்டை தொகுதியில் நாங்கள் தனித்துப் போட்டியிடவுள்ளோம். எங்களுக்கு ஆதரவு தருமாறு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை கேட்டுள்ளோம். அவர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.
வேட்பாளர் பெயர் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.
ஆங்கிலேயர் காலத்தில் கூட உணவுக்கு வரி விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அரிசிக்கு கூட வரிவிதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பே முக்கியம். இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கக் கூடாது.
இலங்கையில், தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான முயற்சிகள் வெற்றி பெறும் நிலையில்உள்ளன. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமைதித் தீர்வுக்கு பாதகமாகஅமையும் என்றார் சங்கரய்யா.












Click it and Unblock the Notifications