For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களவை சபாநாயகர் யார்? - நாளை தெரியும்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வரும் 10ம் தேதி மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாஜக இன்னும் தன்னுடையவேட்பாளரை அறிவிக்கவில்லை.

முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் இதுவரை சபாநாயகருக்கான வேட்பாளரைஅறிவிக்கவில்லை.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரான பாலயோகி ஹெலிகாப்டர் விபத்தில்இறந்ததையடுத்து, அக்கட்சிக்கே சபாநாயகர் பதவியை ஆளும் பாஜக அரசு ஒதுக்கியிருந்தது.

ஆனால் குஜராத் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியைப் பதவி நீக்கம் செய்தே ஆகவேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி ஒற்றைக் காலில் நின்றதோடு, எதிர்க் கட்சிகள் கொண்டு வந்ததீர்மானத்தின்போது ஓட்டளிக்காமல் வெளிநடப்பு செய்து விட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் இந்தச் செயல்களையடுத்து, சபாநாயகர் பதவியைத் தன் வசமே எடுத்துக் கொள்ளபாஜக முடிவு செய்து விட்டது. அப்பதவி தங்களுக்கு வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் தெளிவாக அறிவித்து விட்டார்.

இதையடுத்து தங்களுடைய வேட்பாளரையே சபாநாயகர் தேர்தலுக்கு நிறுத்த பாஜக முடிவு செய்து விட்டது.ஆனால் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தற்போது பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

மத்திய அமைச்சர்கள் ராம்நாயக் மற்றும் ஜக்மோகன், பாஜகவின் மூத்த தலைவர் லக்ஷ்மி நாராயண் பாண்டேஆகியோர் தவிர பாஜகவின் செய்தித் தொடர்பாளரான மல்ஹோத்ராவின் பெயரும் சபாநாயகர் பதவிக்கு அடிபட்டுவருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து விட்டு, சபாநாயகருக்கானவேட்பாளர் பெயரை அறிவிக்கப் போவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இன்றுகூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியையும் அவர் இன்று மாலை சந்தித்துப் பேசியுள்ளார்.எப்படியும் நாளைக்குள் அடுத்த சபாநாயகர் யார் என்பதும் தெரிந்து விடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X