ஓட்டுப் போடும்போது சிந்திக்க மறந்த மக்கள்: கருணாநிதி வருத்தம்
சென்னை:
ஓட்டுப் போடுவதற்கு முன் ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் ஓட்டளித்த மக்கள் தற்போது அதன் பலனைஅனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறினார்.
சென்னையில் அவர் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர்களும் சமீப காலங்களில் முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின்போது 1991 முதல் 1996 வரையிலான ஐந்து ஆண்டுகளிலும் ரூ.34,424கோடி மதிப்பிலான தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் சட்டசபையில் பேசிய அமைச்சர் இந்தக் காலகட்டத்தில் ரூ.90,650 கோடி செலவில் தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இந்த இரண்டில் எது உண்மை?
இதேபோல் தற்போது முரட்டுத்தனமான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. பிளாஸ்டிக்பொருட்களை வைத்திருந்தாலே குற்றம் என்று சட்டம் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
ஓட்டுப் போடுவதற்கு முன்பாக ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் ஓட்டளித்ததன் விளைவைத்தான் மக்கள் தற்போதுஅனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது உண்மைதான். என்றாலும்அப்பொருட்களுக்கு ஒரேயடியாகத் தடை விதிக்காமல், படிப்படியாகத் தடை விதிப்பதே சரியானது.
வசதி படைத்தவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் எளிதில் மற்ற விலை உயர்ந்தஉலோகத்திலான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் ஏழைகள் மாற்றுப் பொருட்களை வாங்குவதற்கு என்ன செய்வார்கள் என்பதை இந்த அதிமுக அரசு ஒருநிமிடம் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications