சென்னை கொலையாளி 2 ஆண்டுகளுக்குப் பின் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கே.கே. நகரில் மனைவி மற்றும் மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு கேரளாவுக்குத் தப்பிச் சென்றவர் சென்னை திரும்பி வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.

கே.கே. நகரில் வசித்து வந்தவர் திபேசியஸ். இவரது மனைவி விஜி. இவர்களுடைய ஒரே மகன் மெர்லின்.

விஜியின் நடத்தை குறித்தும், மெர்லின் தனது மகன்தானா என்ற சந்தேகமும் திபேசியஸுக்கு அடிக்கடி எழுந்துவந்தது. இது தாடர்பாக விஜியுடன் அடிக்கடி அவர் சண்டை போடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி விஜியையும், மெர்லினையும் சுத்தியலால் அடித்துக்கொலை செய்தார் திபேசியஸ். பின்னர் தனது சொந்த ஊரான கேரளாவுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவரைப்போலீசார் வலை வீசித் தேடி வந்தனர்.

இதற்கிடையே 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் சென்னை திரும்பினார் திபேசியஸ். இதுகுறித்து போலீசாருக்குத்தகவல் கிடைத்ததையடுத்து, அவரை சுற்றி வளைத்துப் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+