வாணியம்பாடியில் ஒரே நாளில் ஜெ., கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாணியம்பாடி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒரே நாளில் பிரச்சாரம்செய்யவுள்ளனர்.
வாணியம்பாடி சட்டசபை இடைத்தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதாவும்,கருணாநிதியும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஜெயலலிதா அங்கு பிரச்சாரம் செய்கிறார். கருணாநிதியோ 20ம் தேதிமுதல் 21 ம் தேதி வரை அங்கு பிரச்சாரம் செய்கிறார்.
ஆக 20ம் தேதி ஜெயலலிதாவும், கருணாநிதியும் வாணியம்பாடியில்தான் இருப்பார்கள்.
இரு பெரும் தலைவர்களும் ஒரே நாளில் வாணியம்பாடியில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் தொகுதி களைகட்டியுள்ளது. இரு கட்சித் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரதிதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications