சாக்கடை கலந்த அசுத்த நீரை குடித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரியில் சாக்கடை கலந்த நீரைக் குடித்ததால் இரண்டு பேர் இறந்தனர். மேலும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரியில் உள்ள ஏர்கொல்லம்பட்டி என்ற கிராமத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வந்தது. இந்த அசுத்த நீரை அந்த கிராமமக்கள் பருகினர். நீரை குடித்த பலரும் மயக்கமடைந்தனர்.
மயக்கமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால்,சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு பேர்இறந்தனர். மேலும் பலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications