ஏற்காடு கோடை விழா ரத்து
ஏற்காடு:
சேலம் மாவட்டத்திலுள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கோடை விழாவை அரசு ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
ஏற்காட்டில், மே 19ம் தேதி முதல் 22 ம் தேதி வரை கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில்,ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.
சுற்றுலா பயணிகளின் முழுக் கவனமும் இப்போதைக்கு அங்குதான் இருக்கும். எனவே இந் நிலையில் ஏற்காட்டில் கோடை விழாநடத்தப்பட்டால் அது நச்சயம் சுற்றுலாப் பயணிகளை கவராது.
எனவே வேறொரு நாளில் கோடை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு இணையான அட்டகாசமான சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேலத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில்உள்ளது இந்த குட்டி மலைப் பகுதி. இங்கிருந்து ஒத்தையடி மலைப் பாதையில் சென்றால் குட்டி அருவியும் உள்ளது.
ஏரளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இந்த இடத்துக்கு அரசு போதிய முக்கியத்துவம் தராமல் இருந்து வருவதுஆத்திரமூட்டும் விஷயமாகும்.
இப்போது கோடை விழாவையே ரத்து செய்துவிட்டுள்ளது. உறுதியளித்தபடி இன்னொரு நாளில் விழா நடக்குமா என்பதும்சந்தேகத்துக்குரியது தான்.












Click it and Unblock the Notifications