இலங்கை அமைதி பேச்சுவார்த்தை தாமதமாகுமா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் முடிவடைந்த பின்னரே தாய்லாந்தில் நடக்கவுள்ள அமைதிப்பேச்சுவார்த்தைக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று இலங்கைப் பிரதர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். உடனேஅரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால், இரு தரப்பினரும் கையெழுத்திட்ட நிரந்தர போர் நிறுத்தஒப்பந்தம் அமலுக்கு வந்தது இந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி தான்.

இம் மாதம் 24ம் தேதியோடு போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் முடிவடையப் போகிறது.

நார்வே நாட்டு முயற்சியால் அமலுக்கு வந்தது இந்தப் போர் நிறுத்தம். இப்போது அதே நாட்டின் உதவியோடுஇலங்கை அரசின் பிரதிநிதிகளும் புலிகளும் தாய்லாந்தில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். அடுத்த மாதம் இந்தப்பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

இந் நிலையில் இன்னும் பேச்சுவார்த்தைக்கான நாள் குறிக்கப்படவில்லை. இது குறித்து சண்டே டைம்ஸ் இதழுக்குரணில் கொடுத்துள்ள பேட்டியில்,

போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் முடியட்டும் என்று காத்திருக்கிறோம். இதன் பின்னர் தான்பேச்சுவார்த்தைக்கான தேதி இறுதி செய்யப்படும். பெரும்பாலும் ஜூன் 3வது வாரத்தில் இந்தப் பேச்சுக்கள்தொடங்கலாம் என்றார்.

ஜூன் 2வது வாரத்தில் ரணில் இந்தியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைகள்குறித்து அவர் இந்தியத் தலைவர்களிடம் விளக்குவார்.

அதற்கு முன்னதாக இம்மாத இறுதியில் பிரிட்டின் சென்று பிரதமர் டோனி பிளேரைச் சந்தித்து இந்த விவகாரம்குறித்துப் பேசவும், ஐரோப்பிய யூனியன் தலைவர் ரோமனா புரோடியுடன் பேச்சு நடத்தவும் ரணில் முடிவுசெய்துள்ளார்.

தாய்லாந்தில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் வட-கிழக்குப் பகுதியில் இடைக்கால சுயாட்சி கொண்ட அரசுஅமைப்பது குறித்து மட்டுமே பேசப்பட வேண்டும் என புலிகள் கூறி வருகின்றனர். ஆனால், இலங்கை அரசோஇனப் பிரச்சனை, ஆயுதங்கள், அரசியல் தீர்வு உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் முழு அளவில் பேச்சுநடத்த வேண்டும் என்கிறது.

மேலும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தங்கள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும், போர் நிறுத்தஒப்பந்ததில் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் அமலாக்க வேண்டும் என்று புலிகள் நிபந்தனையும்விதித்துள்ளனர்.

இதற்கு அந் நாட்டு அதிபர் சந்திரிகாவும் அரசுக்கு ஆலோசனை கூறி வரும் மூத்த புத்த மத ஆலோகர்களும்எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராணுவமும் இதை எதிர்த்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்தநிபந்தனைகளை விக்கிரமசிங்கேயால் நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் என்று கூட கருதப்படுகிறது. இதனால் தான் தாய்லாந்துபேச்சுவார்த்தை தேதியை இறுதி செய்ய முடியாமல் ரணில் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் தாமதமடைவதைத் தவிர்க்க நார்வே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+