பிரபாகரனைப் பிடிக்கும் தீர்மானம் தேவையா? ஜெ. மீது வைகோ பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர இலங்கைக்கு ராணுவத்தைஅனுப்ப வேண்டும் என தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிகக் கடுமையாகவிமர்சித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக உருவாக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி பாண்டிச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில்வைகோ பேசினார். இக் கூட்டத்தில் பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய வைகோ கூறியதாவது:

நார்வே நாட்டின் மனிதாபிமான முயற்சியால் இன்று இலங்கையில் அமைதி ஏற்படும் நல்ல சூழல்ஏற்பட்டிருக்கிறது. உலகமே இன்று இலங்கையை நோக்கி தனது பார்வையைப் பதித்துள்ளது.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு நல்ல உள்ளமும் நினைக்கிறது. அங்கே இன்னலுக்குஉள்ளான தமிழினம் விடியலைக் காண வேண்டும் என்று அனைவரும் ஏங்கும் இந்த நேரத்தில் பிரபாகரனைப்பிடிக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தேவைதானா?

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்கினார்களே.அப்போது இந்திய ராணுவத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் போட்டாரா ஜெயலலிதா?இல்லை பாண்டிச்சேரி சட்டசபையில் தான் அப்படிப்பட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டதா?

இந்திய பாதுகாப்புப் படைகளின் மிகச் சிறப்பான பதிலடியால் அன்று ஏற்படவிருந்த பெரும் சேதம்தவிர்க்கப்பட்டது.

கலைஞர் அவர்கள் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கவிவகாரத்தில் பிரதமரைச் சந்தித்துப் பேசி அதைக் காப்பாற்றினேன். ஆனால், கருணாநிதியோ அந்த விவகாரத்தில்வாயே திறக்கவில்லை என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+