மதிமுகவை தடை செய்ய புதுவை காங். கோரிக்கை
பாண்டிச்சேரி:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வரும் மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என்றுபாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரான நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சரான அத்வானியிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிகக் கடுமையாக விமர்சித்து பாண்டிச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில்சமீபத்தில் வைகோ பேசினார்.
இந்நிலையில் இன்று பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் இதுகுறித்து நாராயணசாமி கூறியதாவது:
மதிமுகவையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் புலிகள் மீதான தடையை விதித்துள்ளது.
இந்நிலையில் மதிமுகவின் தலைவரான வைகோவே இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் யார் மீதும் மத்திய அரசால் நடவடிக்கை எடுக்கமுடியும்.
எனவே புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வரும் மதிமுகவையே மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.இதுகுறித்து அத்வானியிடம் நான் வலியுறுத்திப் பேசியுள்ளேன் என்றார் நாராயணசாமி.