சென்னை: எய்ட்ஸ் சோகத்தில் ஒருவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதால் மனம் உடைந்த கரூரைச் சேர்ந்த ஒரு நபர் சென்னையில் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி புதூரைச் சேர்ந்தவர் பரமசிவன் (40). இவர் கடந்த சில மாதங்களாகக்காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்னை-தாம்பரத்தில் உள்ள காசநோய்மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு பரமசிவனைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால்அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மிகவும் மனம் உடைந்து போன பரமசிவம், அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications