வெளிநாட்டுத் தமிழர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி வழங்கினார் ஜெ.
சென்னை:
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு தமிழர்களுக்கு ஆயுள்கால மற்றும் மருத்துவஇன்சூரன்ஸ் பாலிசிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் தமிழர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்புமற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கும் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்" என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு சமீபத்தில் ஒப்பந்தம்செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், விபத்து காரணமாக ஏற்படும் மரணம் அல்லது ஊனத்துக்கான இன்சூரன்ஸ் மற்றும் விபத்துஅல்லது நோய் காரணமாக இந்தியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான இன்சூரன்ஸ்ஆகிய இரு காப்புறுதிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் ஒரு முறை மட்டும் பிரீமியத் தொகை செலுத்தி, அடுத்து வரும் ஐந்துஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான பாதுகாப்பைப் பெறலாம்.
இந்தப் புதிய இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குவைத்தில் வேலை பார்க்கும்முகமது இப்ராஹிம், சவூதியில் வேலை பார்க்கும் மங்கலசாமி, காளிமுத்து, மலைசிங்கம், பஹ்ரைனில் வேலைபார்க்கும் குமார், வேல்முருகன் ஆகியோர் நேற்று ஜெயலலிதாவிடமிருந்து இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications