ராணுவ குடியிருப்பில் தற்கொலை படை தாக்குதல்: 22 வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு அருகே இன்று அதிகாலை ஒரு பஸ் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படைத் தீவிரவாதிகள்,அருகிலிருந்த ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்து பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இதில் 22 ராணுவ வீரர்களும்அவர்களுடைய குடும்பத்தினர் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹிமாச்சலிலிருந்து ஜம்மு நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சை கலுச்சாக் என்ற இடத்தில் வழிமறித்து தாக்கியதீவிரவாதிகள், அதிலிருந்த ஏழு பயணிகளைச் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் பஸ்சிலிருந்து இறங்கிய தீவிரவாதிகள், கே.பி. லைன்ஸ் அருகில் உள்ள கலூசக் ராணுவ முகாமிற்குள்புகுந்தனர். இந்த ராணுவ முகாமிற்குள் ராணுவத்தினரின் குடியிருப்பும் உள்ளது.
இந்தக் குடியிருப்பின் கேட்டில் நின்றிருந்த காவலாளியின் மீது கிரனைட் குண்டை வீசினர். இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு உள்ளே இருந்த வீடுகளுக்குள் புகுந்தனர்.
அங்கே தூங்கிக் கொண்டிருந்த ராணுவத்தினர் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் தீவிரவாதிகள்கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தீவிரவாதிகளின் இந்தத் திடீர்த் தாக்குதலால் அதிர்ந்துபோன அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து ஜம்முவிலிருந்து ஏராளமான போலீசாரும் சிறப்பு ராணுவ கமாண்டோக்களும் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது இரு தரப்பிலும் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகள் தாக்குதலில் 22 ராணுவவீரர்களும், அவர்களுடைய குடும்பத்தினர் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
வீடுகளைச் சுற்றி வெடிகுண்டுகளைக் கட்டியும் வெடிக்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள்.
ராணுவக் குடியிருப்புக்குள் சென்று இந்தத் தீவிரவாதிகள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயங்கரத் தாக்குதலில் மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications