இலங்கை: "மனித உரிமை கண்காணிப்பு குழு தேவை"
கொழும்பு:
விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் அமைதிப் பேச்சுவார்த்தையின்போது மனித உரிமைகள் எதையும் மீறாமல்இருக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த ஒரு தன்னார்வஅமைதி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தினால் புலிகளுக்கு மட்டுமில்லாமல் இலங்கை அரசுக்கும்நன்மையே கிடைக்கும் என்றும் அந்த அமைதி அமைப்பு கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஒரு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றும்அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுவர்களைத் தங்கள் படைகளில் சேர்த்துக் கொள்வது, அவ்வாறு சிறுவர்களை அனுப்ப மறுக்கும் குடும்பங்களைத்தண்டிப்பது என்பன போன்ற சில மனித உரிமை மீறல் தொடர்பான செயல்களில் புலிகள் ஈடுபடுவதாக வந்தகுற்றச்சாட்டையடுத்தே, இந்த அமைதி அமைப்பு இத்தகைய யோசனையையும் வேண்டுகோளையும்விடுத்துள்ளது.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்களை புலிகள் ஏற்கனவே மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications