இடைத் தேர்தல்: வேட்பு மனுக்களின் பரிசீலனை தொடங்கியது
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் இன்று காலை வேட்பு மனுக்களின்பரிசீலனை தொடங்கியது.
சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் வரும் 31ம் தேதி இடைத் தேர்தல்நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. சைதாப்பேட்டையில் 30 பேரும்,வாணியம்பாடியில் 26 பேரும் மற்றும் அச்சிறுப்பாக்கத்தில் 21 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 77 பேருடைய வேட்பு மனுக்களும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன.
பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான செங்கை சிவம் திமுக போட்டி வேட்பாளராக இந்த மூன்றுதொகுதிகளிலுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இரண்டு தொகுதிகளுக்கும் மேல் தாக்கல் செய்துள்ளதால் அவருடைய வேட்பு மனுக்கள் எப்படியும் தள்ளுபடிசெய்யப்பட்டு விடும்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்ததைப் பிரச்சனையாக்கவே செங்கை சிவத்தை இவ்வாறு மூன்று தொகுதிகளிலும் மனுத் தாக்கல்செய்ய திமுகவே ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று மாலையுடன் முடிவடைந்து விடும். வரும் 16ம் தேதி வேட்பு மனுக்களைவாபஸ் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாளாகும்.