Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரக்கோணம் அருகே தடம்புரண்ட திருப்பதி- மைசூர் ரயில்

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்:

திருப்பதியிலிருந்து மைசூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டது. இதில் பல பயணிகள்காயமடைந்தனர். உயிர் சேதம் எதுவும் இல்லை.

திருப்பதியில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை சோளிங்கநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது,ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.

பயணிகள் பலரும் படுக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் பயணிகள் நல்லஉறக்கத்தில் இருந்ததால் அவர்கள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து முடிந்துவிட்டது.

காயமடைந்த பயணிகளை சோளிங்கநல்லூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

அந்த தடம் லூப் லைனில் அமைந்திருப்பதால் வேறு ரயில்களின் போக்குவரத்து இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை. தடம்புரண்டபெட்டிகள் அந்த இடத்திலேயே கழற்றிவிடப்பட்டு அந்த ரயில் மீண்டும் 4 மணிநேரம் கழித்து காலை 7 மணிக்கு சோளிங்கநல்லூரில்இருந்து புறப்பட்டது.

சமீப காலமாக இந்தியா முழுவதும் ரயில்கள் தடம் புரளுவதும், ஒரே டிராக்கில் ஓடுவதும் அதிகரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+