அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதியாக்க யோசனை
டெல்லி:
அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவு செய்ய பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் அடுத்தவாரம் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அதிமுக, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிகட்சி, லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆகியவை பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் பிரபல விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் எனசமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் வாஜ்பாயைநேரில் சந்தித்துப் பேசினார்.
அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நடக்கும் கூட்டத்தில் ஜோதிபாசு, ஹர்கிசன் சிங் சுர்ஜித் போன்றமூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்என்று கோரி வருகின்றன.
காங்கிரஸ் முதலில் நாராயணனை ஆதரிப்பதாகக் கூறியது. ஆனால், இன்று யாரை ஆதரிப்பது என இன்னும் முடிவுசெய்யவில்லை என்று அறிவித்துவிட்டது.
பா.ஜ.க. மகாராஷ்டிர ஆளுநர் அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க விரும்புகிறது.
வரும் ஜூலை 24ம் தேதி ஓய்வு பெறவுள்ள நாராயணன் மீண்டும் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாகஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், ஊட்டியில் உள்ள அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர்நிருபர்களிடம் பேசுகையில்,
நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றார்.