ராணுவ கட்டுப்பாட்டு அறையில் வாஜ்பாய் !
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் இன்று திடீரென டெல்லியில் உள்ள ராணுவத் தலைமையகத்துக்கு வந்தார்.
அங்கு ஆபரேஷன்ஸ் ரூம் எனப்படும் ராணுவத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய அறையில் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தீவிரவாதிகளை அனுப்பி வரும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் தாக்குதலுக்கு இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில்வாஜ்பாயின் இந்த விசிட் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்த அறையில் இருந்தவண்ணம் ராணுவத்தை இயக்கி வரும் அதிகாரிகள் வாஜ்பாயிடம் எல்லையில்குவிக்கப்பட்டுள்ள வீரர்கள், ஆயுதங்கள், பாகிஸ்தான் படையினரின் நடமாட்டம், ஆயுத பலம் ஆகியவை குறித்துவிளக்கினர்.
எல்லைப் பகுதியில் உள்ள சில மூத்த கமாண்டர்களுடனும் அவர் ராணுவ தொலைத் தொடர்பு மூலம் பேசிநிலைமையை நேரில் கேட்டறிந்தார்.
அப்போது பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபன், விமானப் படைத் தளபதிகிருஷ்ணசாமி, ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல் சாகல், ராணுவ உளவுப் பிரிவின் டைரக்டர்ஜெனரல் லோசாப் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சுமார் 45நிமிடங்கள் அந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வாஜ்பாய் எல்லை ராணுவத்தின் தயார் நிலை குறித்துநேரில் ஆராய்ந்தார்.