மீண்டும் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 4 வீரர்கள் பலி
உதம்பூர்:
காஷ்மீரில் இன்னொரு ராணுவ முகாமின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடந்தது. லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாசனா ராணுவ முகாமில் நள்ளிரவு 2 மணிக்கு இத் தாக்குதல் நடந்தது. பயங்கரஆயுதங்களுடன் இந்த ராணுவ முகாமில் நுழைந்த 3 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் முதலில்வெடிகுண்டுகளை வீசி காவலுக்கு இருந்த வீரர்களை நிலைகுலையச் செய்தனர்.
பின்னர் உள்ளே நுழைைந்து குண்டுகளை வீசியும் கண்மூடித்தனமாக சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் ஆழ்ந்தஉறக்கத்தில் இருந்த 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். சத்தம்கேட்டு உடனடியாக விழித்துக் கொண்ட பிற வீரர்கள்உடனே பதிலடித் தாக்குதலில் இறங்கினர்.
இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். தாக்குதலில் 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த வாரம் ராணுவக் குடியிருப்பில் நடந்த தாக்குதலில் 10 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 33 பேர் இறந்தனர்.
இதற்கு பதிலடி தர இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் மீண்டும் ராணுவ முகாம் தாக்கப்பட்டுள்ளது.